Friday, May 31, 2019

•இது ஒரு கேவலமான விமர்சனம்!

•இது ஒரு கேவலமான விமர்சனம்!
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
சுமந்திரன் இவ்வாறு கூறியது மிகச் சரியே. எனவே இதற்காக அவரை ஒரு முஸ்லிம் அக சித்தரிப்பது கேவலமான விமர்சனம் ஆகும்.
ஆனால் இங்கு சுமந்திரன் கவனிக்க வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன.
ஒன்று, இதேபோலத்தான் தமிழ் மக்களும் தம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தினார்கள். எனவே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை வன்முறை என்றும் பயங்கரவாதம் என்றும் சுமந்திரன் விமர்சித்தது தவறாகும்.
இரண்டு, புலிகள் முஸ்லிம்களை தாக்கியதை இனச் சுத்திகரிப்பு என்றும் அதையிட்டு தான் வெட்கப்படுவதாகவும் கூறிய சுமந்திரன் இன்று இலங்கை அரசு முஸ்லிம்களை தாக்கும்போது இனச் சுத்திகரிப்பு என்று கூறாமல் தவிர்த்துள்ளார். அது ஏன்?
முஸ்லிம்களை ஆதரிப்பதால் அவருக்கு தேர்தலில் ஒரு முஸ்லிம் ஓட்டுகூட கிடைக்கப் போவதில்லை. மாறாக சில தமிழர்களின் ஓட்டை அவர் இழக்கக்கூடும்.
ஆனாலும் அவர் அது பற்றி சிந்திக்காமல் முஸ்லிம்களை ஆதரித்து கருத்து கூறியது வரவேற்கத் தக்கது. பாராட்டப்பட வேண்டியது.

No comments:

Post a Comment