Friday, May 31, 2019

இது எந்தளவு கொடுமையானது என்பதை நாம் அறிவோம்

இது எந்தளவு கொடுமையானது என்பதை நாம் அறிவோம்
ஏனெனில் இந்த வலியை நாம் நிறைய அனுபவித்திருக்கிறோம்
முதலில் குண்டு வெடித்தது. இப்போது கலவரம் வெடித்துள்ளது.
இது அத்தனையும் கோத்தபாயா பதவி பெறுவதற்காக நடக்கிறதா என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.
ஏனெனில் திங்கட்கிழமை வெடிக்கும் என்றார் மகிந்த ராஜபக்ச
அவர் குண்டு வெடிக்கும் என்கிறார் என்றே நினைத்தோம். ஆனால் அவர் கலவரம் வெடிக்கும் என்பதையே கூறியிருக்கிறார்
குண்டு வெடிப்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. கலவரம் வெடிக்கும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
ஆனால் பாவம் மக்களுக்குத்தான் எதுவும் தெரியவில்லை.
அவர்கள் தங்கள் நலனுக்காக மக்களிடையே பிரிவனையை உருவாக்க முனைகிறார்கள்.
ஆனால் மக்கள் தமது நலனுக்காக ஒருமித்து நிற்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
குறிப்பாக தமிழ்மக்கள் தமது உறுதியான ஆதரவை முஸ்லிம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment