Friday, May 31, 2019

அவர்கள் சஹ்ரானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்

அவர்கள் சஹ்ரானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்
அவர்கள் சஹ்ரான் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொலிசில் கேட்டிருக்கிறார்கள்
ஆனால் நீங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
குண்டு வெடித்த பின்பும்கூட
அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டார்கள்
அவர்கள்தான் எஞ்சியவர்களையும் காட்டித் தந்தார்கள்
குண்டு வைத்தவர் யாரும் புர்க்கா அணிந்து வரவில்லை
ஆனாலும் நீங்கள் புர்க்காவை தடை செய்தீர்கள்.
அதற்குகூட அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள்
ஆனாலும் நீங்கள்
அவர்களின் கடைகளை எரிக்கிறீர்கள்
அவர்களின் வீடுகளை உடைக்கிறீர்கள்
அவர்களின் பள்ளிவாசல்களை சேதமாக்குகிறீர்கள்
அவர்கள் புனிதமாக கருதும் குரானைக்கூட நீங்கள் விட்டு வைக்கவில்லை.
எந்த காவல்துறை தங்களை காப்பாற்றும் என்று நம்பினார்களோ
அந்த காவல்துறை முன்னிலையிலேயே இத்தனையும் செய்துள்ளீர்கள்.
அவர்களின் வாழைப்பழக்கடையைக்கூட இரக்கமின்றி தாக்கிய நீங்கள்
ஹிஸ்புல்லாவையும் ரிசாத்தையும் ஏன் தாக்கவில்லை?
இதற்கு பிறகும் அவர்கள் தங்களை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்?
சீதை போல் இவர்களும் தங்களை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டும் என்கிறீர்களா?
ஆக மொத்தத்தில் நீங்கள் சாதிப்பது எல்லாம்
“குண்டு வைத்தது சரிதான்” என்று அவர்கள் எல்லோரும் நினைக்க வைக்கப் போகிறீர்கள்.
அப்படி அவர்கள் நினைத்தால்
அப்புறம் ஒரு நாள்கூட உங்களால் நிம்மதியாக தூங்கமுடியாது!

No comments:

Post a Comment