Friday, May 31, 2019

இஸ்லாமியர் புர்க்கா அணிவதை தடை செய்ய வேண்டும்

இஸ்லாமியர் புர்க்கா அணிவதை தடை செய்ய வேண்டும் எனக் கோருவோர் இந்த சாமிமார் கோமணமாவது கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வருவார்களா?
புர்க்கா அணிந்து வந்து யாரும் குண்டு வைக்கவில்லை. ஆனாலும் அரசு இஸ்லாமியர் புர்க்கா அணிவதை நிறுத்தும்படி நிர்ப்பந்திக்கிறது.
குண்டு வெடிக்கப் போவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, குண்டு வெடித்ததும் புர்க்கா அணிவதை தடுக்க சட்டம் கொண்டு வருகிறது.
அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது. மாறாக அறிவுறுத்தும் முறையை பாவிக்க வேண்டும். ஏனெனில் நிர்ப்பந்தம் தோலைத்தான்; தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவை தொடும்.
பேராயர் தனக்கு அரசு தர முன்வந்த குண்டு துளைக்காத வாகனம் தேவையில்லை என்று கூறியிருக்கிறார். நல்ல விடயம். அவரை பாராட்டுவோம்.
அதேபோல் அவர்
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய கடவுள் தேவையில்லை
தண்ணீரில் நடந்து காட்டிய இறைவனும் தேவையில்லை
செங்கடலை இரண்டாக பிளந்த தேவனும் தேவையில்லை
இறந்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த இரட்சகரும் தேவையில்லை
தன் ஆலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்காமல் செயல் இழக்க வைக்கும் கடவுள்தான் தேவை என்று சொல்வாரா?
ஒருபோதும் அவ்வாறு சொல்லமாட்டார். சொன்னால் அவர் பேராயராக இருக்க விடமாட்டார்கள்.
எனவே இனி குண்டு வெடிக்கக்கூடாது என்று அரசு உண்மையில் விரும்பினால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் பௌத்த, இந்து மற்றும் கிருத்தவ அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும்.
மத அடிப்படைவாதத்தை சட்டம் போட்டு ஒருபோதும் ஒழிக்க முடியாது. அறிவுறுத்தல் உரையாடல்களை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment