Friday, May 31, 2019

•ஒரு இனத்தின் சுதந்திரத்தை மறுக்கும் எந்த இனமும் தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது!

•ஒரு இனத்தின் சுதந்திரத்தை மறுக்கும் எந்த இனமும்
தான் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது!
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சுதந்திரத்தை மறுத்துவிட்டு சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரித்து வைத்துக்கொண்டு மாறி மாறி கலவரம் செய்து அடக்க முனைகிறது சிங்கள அரசு.
இதற்கு எதிராக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றுபடப் பொகிறார்களா அல்லது பிரிந்து அடிமையாக கிடக்கப் போகிறார்களா என்பதே இப்போது முன் உள்ள கேள்வி.
இரண்டு சிறுபான்மை இனங்கள் இருக்கும் நாட்டில் பெருபான்மை இனத்திற்கு எதிராக ஒரு சிறுபான்மை இனம் போராடும்பொது மற்ற சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தின் செல்லப் பிள்ளையாக இருக்கும் என்றார் தோழர் லெனின்.
அதேபோல் தமிழர் மீது தாக்குதல் செய்யும்போது முஸ்லிம்களை செல்லப் பிள்ளையாக வைத்திருப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் செய்யும்போது தமிழர்களை செல்லப் பிள்ளையாக வைத்திருப்பதும் சிங்கள அரசின் ராஜதந்திரம்.
இந்த ராஜதந்திரத்தைப் புரிந்து முஸ்லிம்களுடன் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். அடக்கு முறைக்கு எதிராக ஒருமித்து போராட வேண்டும்.
அதைவிடுத்து நாம் சாகும்போது அவர்கள் பாற் சோறு சாப்பிட்டார்கள் என்றோ அல்லது அவர்கள் எங்களை பள்ளிவாசலில் வைத்து கொன்றார்கள், யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினார்கள் என்றோ மாறி மாறிக் கூறிக் கொண்டிருப்பது அரசுக்கே நன்மை பயக்கும்.
குறிப்பு- முஸ்லிம்களின் புனித குரானையே எரித்திருக்கிறார்கள். ஆனால் தங்களை முஸ்லிம்நாடு என்று கூறிக் கொள்ளும் ஒரு நாடுகூட இதனைக் கண்டிக்கவில்லை. இதனை இலங்கை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment