Friday, May 31, 2019

•விமல் வீரவம்ச அவர்களே! நீங்கள் என்ன ஹட்டார் எயர்வேசில் வந்தவர்களா?

•விமல் வீரவம்ச அவர்களே!
நீங்கள் என்ன ஹட்டார் எயர்வேசில் வந்தவர்களா?
செய்தி- முஸ்லிம்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லட்டும்
முன்பு தமிழனை கள்ளதோனி என்றார்கள். தமிழனை இந்தியாவிற்கு திரும்பிச் செல்லுங்கள் என்றார்கள்
இப்போது முஸ்லிம்களை வந்தேறி என்கிறார்கள். அவர்களை அரோபியாவுக்கு செல்லுங்கள் என்கிறார்கள்.
தெரியாமத்தான் கேட்கிறேன். விமல்வீரவம்சவும் அவரது கூட்டத்தினரும் என்ன பாஸ்போட் எடுத்து கர்த்தார் எயர்வேசில் வந்தவர்களா?
விஜயனும் அவனதும் கூட்டாளியும் இந்தியாவில் இருந்து வள்ளத்தில் வந்ததாகத்தானே மகாவம்சம் கூறுகிறது.
வீரவம்சவும் அவரது கும்பலும் இலங்கையின் பூர்விக குடிகள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லையே?
அப்படியிருக்க மற்றவர்களை வெளியேறும்படி சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கு?
முதலாவது, வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் தமிழ் இனத்தவர்களே. இவர்கள் தமிழராக இருந்து மதம் மாறியவர்கள்.
இரண்டாவது, அண்மையில் கீழவாசல் அகழ்வாராச்சியில் தமிழ் இனத்தின் தொன்மை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்னரே தமிழ் இனம் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முக்கியமானது. டி என்ஏ பரிசோதனையில் தமிழரதும் சிங்களவரதும் மூலக்கூறுகள் ஒன்றாகவே இருக்கிறது. எனவே தமிழ் இனத்தில் இருந்தே சிங்கள இனம் தோன்றியிருக்க கூடும் என்பதை இது காட்டுகிறது.
எப்படி பார்த்தாலும் இலங்கைக்கு எதாவது ஒரு இனம் சொந்தம் கொண்டாட முடியுமென்றால் அது தமிழ் இனம்தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
எனவே “வந்தேறி சிஙகள இனமே நாட்டை; விட்டு வெளியேறு” என்று தமிழ் இனம் இதுவரை கூறாமைக்காக விமல்வீரவம்ச சந்தோசப்பட வேண்டும்.
முறைப்படி தன் வீட்டில் நடந்த கொலைக்காக விமல்வீரவம்சவும் அவரது மனைவியும் இந்நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவரும் அவரது மனைவியும் செய்த சட்டவிரோத வியாபாராமும் சம்பாதித்த கோடிக் கணக்கான சொத்துகளும் விசாரிக்கப்ட்டிருக்க வேண்டும்.
அவற்றை மறைப்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டுவதற்காக இப்படி உளறிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment