Friday, May 31, 2019

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது
நீங்கள் மாணவர்களை கைது செய்யலாம். ஆனால் தமிழ் மக்கள் தமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வதை தடுத்துவிட முடியாது.
தமிழ் மக்கள் மாண்டவர்களை நினைவு கூர்வது அழுது புலம்புவதற்காக அல்ல. மாறாக மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. தமிழ் இனம் மட்டும் அப்படியே வீழ்ந்து கிடந்துவிடுமா என்ன?
ஓடாத மானும் போராடாத இனமும் ஒருபோதும் வாழ முடியாது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
தமிழ் மக்கள் ஒரு செய்தியை இலங்கை அரசுக்கு சொல்ல விரும்புகிறார்கள். “நீங்கள் எம்மை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது”.

No comments:

Post a Comment