Friday, May 31, 2019

•ஈழத் தமிழர் விடுதலை பெற தமிழக தமிழர் எப்படி உதவ முடியும்?

•ஈழத் தமிழர் விடுதலை பெற
தமிழக தமிழர் எப்படி உதவ முடியும்?
தமிழகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு செய்வதன் மூலம் உதவ முடியுமா?
இல்லை
சென்னைக் கடற்கரையில் மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவதன் மூலம் உதவ முடியுமா?
இல்லை.
இடைக்கிடை “டெசோ” மாநாடுகளை நடத்துவதன் மூலம் உதவ முடியுமா?
இல்லை
சட்டசபையில் தமிழீழ தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் உதவ முடியுமா?
இல்லை
ஒரு தமிழன் தமிழக முதலமைச்சரானால் உதவ முடியுமா?
நிச்சயமாக இல்லை.
அப்படியென்றால், தமிழக தமிழர்கள் எப்படி உதவ முடியும்?
தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே தமிழக மக்கள் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும்.
இதையே தோழர் தமிழரசன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார்.

No comments:

Post a Comment