Friday, May 31, 2019

•மகிந்தா வதந்தி பரப்புகிறாரா?

•மகிந்தா வதந்தி பரப்புகிறாரா?
வெடித்த குண்டும் அவருக்கு தெரிந்திருக்கிறது
இனி வெடிக்கப் போவதும் அவருக்கு தெரிகிறது
ஆனால் வவுணதீவில் பொலிசாரை சுட்டவர்களை மட்டும் இவருக்கு தெரியவில்லை.
இது எப்படி?
ஒன்றில் குண்டு வைப்பவர்கள் இவருடைய ஆட்களாக இருக்க வேண்டும்
அல்லது இவர் வதந்தி பரப்புவராக இருக்க வேண்டும்
எதுவாக இருந்தாலும் இவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்
ஏனெனில் வதந்தி பரப்பினால் தண்டனை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே குண்டு வைத்தவர்களுடன் தொடர்பு என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது வதந்தி பரப்புவதற்காக கைது செய்யப்பட வேண்டும்
எதுவாக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும்
ஆனால் அரசு அவரை கைது செய்யாவிட்டாலும் பரவாயில்;லை குறைந்த பட்சம் அவரிடம்’ விசாரணையாவது செய்திருக்கலாம்
இலங்கை ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்
ஆனால் மகிந்தா விடயத்தில் அரசு நடந்துகொள்வதைப் பார்த்தால்
“சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் விதிவிலக்கு” என்பது போல் இருக்கிறது.

No comments:

Post a Comment