Friday, May 31, 2019

•நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை!

•நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை!
சஹ்ரான் போட்டோவை வைத்திருந்தாக ஒருவரைக் கைது செய்யும் அரசு சஹ்ரானுடன் சேர்ந்து போட்டோ எடுத்த ஹிஸ்புல்லாவைக் கைது செய்யவில்லை.
பயங்கரவாதிகள் தங்குவதற்கு வீடு கொடுத்தாக ஒருவரைக் கைது செய்யும் அரசு பயங்கரவாதிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்த ரிசாத்தை கைது செய்யவில்லை.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த ரிசாத்தின் சகோதரர் கூட கைது செய்யப்படவில்லை.
இத்தனை குறுகிய காலத்தில் ரிசாத் எப்படி மிகப் பெரும் கோடீஸ்வரானார் என்பதும் விசாரிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல , பிரபாகரன் படம் வைத்திருந்ததாக பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்த அரசு திலீபன் படத்திற்கு அஞ்சலி செலுத்திய சம்பந்தர் அய்யாவை கைது செய்யவில்லை.
தேர்தல் காலத்தில் புலிகளின் பாடல்களை போட்டு பிரச்சாரம் செய்த அஞ்கஜன் ராமநாதனைக்கூட கைது செய்யவில்லை
ஏனெனில் நாய்கள் ஒருபோதும் தமது வாலைக் கடிப்பதில்லை.

No comments:

Post a Comment