Friday, May 31, 2019

ஓடுவோம் இறுதி இலக்கை எட்டும் வரை

ஓடுவோம்
இறுதி இலக்கை எட்டும் வரை
ஓட முடியாதபோது
நடப்போம்
நடக்க முடியாதபோது
தவழ்ந்தாவது செல்வோம்
ஆனால்
ஒருபோதும் இயங்குவதை
நிறுத்த மாட்டோம்!
ஏனெனில் நாம் இயங்குவதை நிறுத்திவிட்டால்
உலகம் எம்மை பார்ப்பதை நிறுத்திவிடும்
முள்ளிவாய்க்காலில்
நாம் ஒன்று சேருவது
ஒப்பாரி வைத்து அழுவதற்காக அல்ல
மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே!
நாம்
கொலை செய்யப்படலாம் -ஆனால்
ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது!
இறுதி வெற்றி உறுதி எமக்கு!
முள்ளிவாய்க்கால் அவலத்தை
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்
எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம்
மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாக!

No comments:

Post a Comment