Thursday, October 27, 2022

கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல்

கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல் தமிழன்- கடவுளே! அநியாயமும் அக்கிரமும் தலைவிரித்தாடும்போது அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன் என கூறினீர்களே. ஏன் இன்னும் வரவில்லை? கண்ணன்- தமிழா! உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் நான் அவதாரமெடுத்து வந்தால் என்னை பயங்கரவாதி என்று உங்கள் சம்பந்தர் அய்யா கூறுவாரே. அதுதான் தயக்கமாக இருக்கிறது. தமிழன்- என்ன சொல்லுகிறீர்கள் கடவுளே. எனக்கு ஒன்றும் புரியவில்லை? கண்ணன்- அன்று நான் அரக்கன் நரகாசுரனை எனது சக்ராயுதத்தால் வதம் செய்ததை தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று வந்து அதே ஆயுதத்தை நான் பாவித்தால் உடனே சம்பந்தர் அய்யாவும் யாழ் இந்தியதூதரும் அது “வன்முறை” என்று அறிக்கை விடுவார்கள் அல்லவா? தமிழன்- ஆமாம்! ஆமாம்! இனி நீங்கள் வந்தால் பயங்கரவாதி என்று சிறையில் அடைப்பார்கள். அப்புறம் நீங்கள் உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கவே பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி வரும். கண்ணன்- போராடும்போது “பயங்கரவாதி” என்பார்கள். நான் செத்த பின்பு “மாவீரர்” என்று புகழ்ந்து மக்களிடம் வோட்டு பெறுவார்கள். உங்கள் தலைவர்கள் பலே கில்லாடிகள். தமிழன்- கடவுளே! அப்ப எமக்கு என்னதான் தீர்வு? நீதி- இனி கண்ணன் ஒருபோதும் வரமாட்டான். ஆனால் அவன் தந்த ஆயுதம் இருக்கிறது. தீர்வு வேண்டும் என்றால் அதை மக்கள் ஏந்த வேண்டும்.

No comments:

Post a Comment