Thursday, October 27, 2022

கோழியின் மூன்றாவது கால் எங்கே?

•கோழியின் மூன்றாவது கால் எங்கே? கோழிக்கு இரண்டு கால் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையே ரணில் கூறினால் நாம் மூன்றாவது காலை தேட வேண்டும். ஏனெனில் ரணில் மட்டுமல்ல அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் எப்போதும் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர். மூக்கனாங்கயிறை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதுபோல் கோத்தாவுக்கு பதிலாக ரணிலை மாற்றியதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் மக்களை ஏமாற்ற ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்கிறார் ரணில்.

No comments:

Post a Comment