Thursday, October 27, 2022

இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்

•இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். யாழ் மருத்துவமனை முன்னால் காந்திசிலை நிறுவி காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய தூதர் ,பிரம்படியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருத்தம்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. இந்திய தூதருடன் சேர்ந்து காந்திக்கு விழா எடுக்கும் எம் தலைவர்களும்கூட பிரம்படியில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. ஒருவேளை அஞ்சலி செலுத்தினால் இந்திய தூதர் கோபம் கொள்வாரோ என்ற அச்சமா?

No comments:

Post a Comment