Thursday, October 27, 2022

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது

•ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது ஆனால் கடவள் கண்ணன் வருவதில்லை தமிழ் மக்களுக்கு தீர்வும் வருகுதில்லை! “நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜனியின் பஞ்ச் வசனத்தை அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. அதுபோல் “ நான் ஆயிரம் தடவை சொன்னாலும் ஒரு தடவைகூட நடக்காது” என்று பஞ்ச் வசனம் பேச வேண்டியவர் எமது சம்பந்தர் அய்யா. முதலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது. அப்புறம் இரு வாரங்களில் தீர்வு குறித்து நல்ல செய்தி வரும் என்றார். அவருக்கு இரண்டாவது சொகுசு பங்களாவும் அதற்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா பண ஒதுக்கீடு என்ற நல்ல செய்தி வந்தது. அதன்பின்பு அடுத்த தீபாவளி பண்டிகை தீர்வு கிடைத்து மகிழ்வான சூழ்நிலையில் நடக்கும் என்றார். அடுத்த தீபாவளிகள் வந்து செல்கின்றன. ஆனால் அவர் கூறிய தீர்வும் வரவில்லை. தீபாவளி கொண்டாடக்கூடிய மகிழ்வான சூழ்நிலையும் தமிழ் மக்களுக்கு இல்லை. பொதுவாக, ஒரு பண்பான அரசியல் தலைவர், தான் கூறியது நடக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்வார். சம்பந்தர் அய்யா பண்பான தலைவரும் இல்லை. அவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நேர்மையான தலைவரும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் தான் சொன்னது ஏன் நடக்கவில்லை என்பதற்கு ஒரு விளக்கமாவது தமிழ்மக்களுக்கு கொடுக்க வேண்டாமா?

No comments:

Post a Comment