Thursday, October 27, 2022

எல்லா நாடுகளிலும் குழந்தையை

எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார். ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது. அதுவும் போர் முடிந்து பதினொரு வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது. சமர் பல கண்ட களத்தை மறந்தோம் அதில் எமக்காக மாண்டவர்களை மறந்தோம் நிலத்தை மறந்தோம். இனத்தை மறந்தோம். எதிரி விட்டெறியும் எலும்புத் துண்டிற்காக குழந்தைகள் துயர் துடைக்க மறந்தோமே இந்தளவு கேவலமான இனமா இது?

No comments:

Post a Comment