Wednesday, October 31, 2018

தமிழ்தேசிய விடுதலையை முன்னெடுப்பது மார்க்கிசிய கொள்கைக்கு முரணானதா?

தமிழ்தேசிய விடுதலையை முன்னெடுப்பது
மார்க்கிசிய கொள்கைக்கு முரணானதா?
நல்லவேளை லெனின் இப்போது உயிரோடு இல்லை.
இருந்திருந்தால் அவரையும் புலித் தேசியம் பேசுவதாக முத்திரை குத்தியிருப்பார்கள்.
“தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்பே அவர்களை பிரிவினையை கைவிட்டு ஜக்கியத்திற்கு வருமாறு அழைக்க முடியும்” என தோழர் சண்முகதாசன் கூறினார்.
லெனின் கூறியதையே தோழர் சண்முகதாசன் கூறினார். தோழர் சண்முகதாசன் கூறியதையே நாம் கூறுகிறோம்.
ஆனால் எம்மை மட்டும் பயங்கரவாதிகள் என்றும் புலிவால் பிடிக்கும் தேசிய வெறியர்கள் என்றும் முத்திரை குத்துகின்றனர்.
சரி. அப்படியென்றால் மண்ணுக்கேத்த மார்க்சியத்தை முன்வைத்து தமிழ்தேசிய போராட்டத்தை முன்னெடுத்து காட்டுங்களேன்!
உங்கள் பின்னாடி வருவதில் எமக்கு ஒன்றும் தயக்கம் இல்லையே!

No comments:

Post a Comment