Tuesday, October 30, 2018

மாணவர்கள் நடக்கிறார்கள் தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்!

•மாணவர்கள் நடக்கிறார்கள்
தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்!
21 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் நோக்கி நடக்கிறார்கள்.
நடைபயணம் செல்லும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக வழியெங்கும் பாடசாலை மாணவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், மத குருமார்கள் என பலதரப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் ஏசி அறையில் உறங்குகிறார்கள்.
மாணவர்கள் கால்கள் புண்ணாகி விட்ட நிலையிலும் தொடர்ந்து நடக்கிறார்கள்.
ஆனால் 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசுவாகனம் இருந்தும் தலைவர்கள் கைதிகளை பார்வையிட செல்லவில்லை.
என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment