Tuesday, October 30, 2018

புரட்சியாளர் தோழர் சேகுவாரா!

புரட்சியாளர் தோழர் சேகுவாரா!
இன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும்.
தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும்.
துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை.
“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது.
அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார்.
“உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.
ஆனாலும் நம்பிக்கை தரும் விடயம் என்னவெனில் தோழர் சே வை அழித்துவிட்டு அமெரிக்க அரசு எப்படி கனவு கண்டதோ அதேபோல் தோழர் தமிழரசனை கொன்றுவிட்டு இந்திய அரசு கனவு கண்டது.
ஆனால் தோழர் சே எப்படி உலக மக்கள் மனங்களில் இன்றும் புரட்சியாளராக வீற்றிருக்கிறாரோ அதேபோல் தமிழகத்தில் போராடும் இளைஞர்களுக்கு தோழர் தமிழரசன் விளங்குகிறார்.

No comments:

Post a Comment