Tuesday, October 30, 2018

“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் மீண்டும் வந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று நெடுமாறன் அய்யா கூறுவது,

•“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் மீண்டும் வந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று நெடுமாறன் அய்யா கூறுவது,
(1)இந்திய அரசு தொடர்ந்து புலிகள் இயக்கத்தை தடை செய்ய உதவுகிறது
(2)சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமை தொடர்ந்து வைத்திருக்க இந்திய அரசுக்கு உதவுகிறது.
(3) ஈழ அகதிகளை கியூபிராஞ் பொலிஸ் கைது செய்து பொய் வழக்கு போட உதவி செய்கிறது.
(4) பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரை விடுதலை செய்யாமல் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க இந்திய அரசுக்கு உதவுகிறது.
(5) இந்திய அரசு இரண்டு போர்க்கப்பல் உட்பட ராணுவ உதவிகளை இலங்கை அரசுக்கு செய்வதற்கு உதவுகிறது.
மாறாக,
(அ) பிரபாகரனுக்காக தமிழக மக்கள் கொந்தளித்து எழாமல் தடுக்கிறது.
(ஆ) முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையில் இந்திய அரசின் பங்கை மறைக்கிறது.
(இ)இன்னொரு போராட்ட தலைமை உருவாகாமல் தடுக்கிறது.
(ஈ)இந்திய உளவுப்படை றோ வின் நோக்கங்களுக்கு நன்கு உதவுகிறது.
அதையும்விட
• தனது 10 வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் ஓடி தப்பிவிட்டார் என்ற பழிச்சொல் பிரபாகரன் மீது விழுகிறது.
• 10 வருடமாகியும் ஏன் இன்னும் வரவில்லை என்று தமிழ்மக்கள் பிரபாகரன் மீது சினம் கொள்ள வைக்கிறது.
• பிரபாகரன் மீது அன்பு கொண்டோர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தவதையும் தடுக்கிறது.
இதெல்லாம் தெரியாதவரோ அன்றி அறியாதவரோ இல்லை நெடுமாறன் அய்யா.
தெரிந்தும் அறிந்தும் அவர் தொடர்ந்து இதை சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

No comments:

Post a Comment