Tuesday, October 30, 2018

•தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் இரு பெண்கள்!

•தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் இரு பெண்கள்!
தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய தோழர் தமிழரசன் பொலிசாரினால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.
தனது ஒரே மகன் கொல்லப்பட்டபோதும் தாயார் அஞ்சி துவண்டுவிடவில்லை.
தள்ளாத வயதிலும் இன்றும் தனது மகன் முன்னெடுத்த தமிழ்தேச விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்.
அதேபோன்று தமிழரசன் பாதையில் போராடிய ஜந்து தமிழ்தேச போராளிகள் கடந்த 5 வருடமாக மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கில் ஜவரில் ஒருவரான காளை என்பவரின் மனைவி சரண்யாதேவி கலந்து கொண்டார்.
அவர் “ என் கணவர் தமிழ்தேச விடுதலைக்காக களமாடி சிறையில் இருப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி “பெண்கள் தமிழ்தேச விடுதலை அரசியலில் தங்களை இணைத்துக்கொண்டு களமாடவேண்டிய தேவை உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இன உணர்வாளர்களை கொன்றாலோ அல்லது சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தாலோ தமிழ் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதை இந்த இரு பெண்களும் நிரூபிக்கின்றார்கள்.
உண்மையில் இவர்களால் தமிழ் இனம் பெருமை கொள்கிறது.
2

No comments:

Post a Comment