Tuesday, October 30, 2018

•யாருக்கும் வெட்கமில்லை!

•யாருக்கும் வெட்கமில்லை!
தனது தீர்ப்புக்கு எதிரானவர்கள் மீது
கோர்ட் அவமதிப்பு வழக்கு போடாமல் இருக்கும்
உச்சநீதிமன்றத்திற்கும் வெட்கமில்லை
மாவோயிஸ்டு என்று அப்பாவிளை சுட்டுதள்ளும் பொலிஸ்
கலவரம் செய்யும் RSS கும்பல் முன் கைகட்டி நிற்பது குறித்து
கேரள கம்யுனிஸ்ட் பினராய் அரசுக்கும் வெட்கமில்லை
வழக்கு போட்டதும் RSS கும்பல்தான்
அதை எதிர்த்து கலவரம் செய்வதும் அதே கும்பல்தான்.
அரசியலுக்காக இரட்டை வேடும்போடுவது குறித்து
பிரதமர் மோடிக்கும் வெட்கமில்லை
எல்லாம் வல்ல கடவுள் ஜயப்பன் என்கிறார்கள்
அப்புறம் பெண்கள் வருவது ஜய்யப்பனுக்கு பிடிக்காது என்று
கல்லெறிந்து கலவரம் செய்கிறார்கள்
பெண்கள் வருவது தனக்கு பிடிக்கவில்லை என்றால்
ஜய்யப்பனே அந்த பெண்களை பழிவாங்குவார்தானே?
நீங்கள் என்டா கலவரம் செய்கிறீர்கள்?
ஒருபுறம் அதிகம் படித்தவர் உள்ள மாநிலம் கேரளா என்கிறார்கள்
மறுபறம் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த நாடு இந்தியா என்கிறார்கள்.
ஆனால் அதே கேரளாவில் பெண்கள் ஹெல்மெட்டுன் கோயிலுக்கு செல்லவேண்டிய அவலம்.
என்னே வெட்கக்கேடு?
குறிப்பு- கேரளாவில் கம்யுனிட்ஸ் கட்சி 20 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கம்யுனிஸ்ட் ஆட்சி ஒருபோதும் இருந்ததில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் பெண்கள் எந்த கோயிலுக்கும் செல்லலாம். இப்போது புரிகிறதா பெரியாரின் பங்களிப்பு?

No comments:

Post a Comment