Tuesday, October 30, 2018

பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு மயிரும் கிடைக்காது என்பது வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!

• பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு மயிரும் கிடைக்காது என்பது வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!
• மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரி பிரதமராக நியமித்துள்ளார்.
• சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் அடைக்கப்பட வேண்டிய மகிந்த கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்திருப்பது ஜனநாயக விரோதமானது.
• விரைவில் தீர்வு கிடைக்கப்போகிறது என்று சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் தமிழ் மக்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒரு இரவில் தகர்க்கப்பட்டுள்ளது.
• என்னதான் சிங்கள கட்சிகள் தம்மிடையே அடிபட்டாலும் தமிழருக்கு உரிமை கிடைக்கக்கூடாது என்ற விடயத்தில் ஒற்றுமையாக செயற்படுகின்றனர்.
• தமிழ் கட்சிகள் இந்த ஒரு விடயத்தையாவது அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment