Wednesday, October 31, 2018

ஒரு மீம்ஸ் மூவாயிரம் கோடி ரூபாவை தூக்கியெறிந்துவிடுமா?

ஒரு மீம்ஸ் மூவாயிரம் கோடி ரூபாவை தூக்கியெறிந்துவிடுமா?
ஆம். முடியும் என்று எமது மீம்ஸ் கிரியேட்டர்கள் நிரூபித்துள்ளார்கள்.
3000 கோடி ரூபா செலவில் பிரதமர் மோடி சர்தார் பட்டேலுக்கு சிலை நிறுவியுள்ளார்.
இதனை எதிர்த்து,
விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்யும் நிலையில் மூவாயிரம் கோடி ரூபாவுக்கு பட்டேலுக்கு சிலை வேண்டுமா என்று எழுதலாமா, அல்லது
மேக் இன் இந்தியா என்று கூறிக்கொண்டு திரியும் பிரதமர் மோடி பட்டேல் சிலையை சீனா மூலம் செய்யலாமா என்று கேட்டு எழுதலாமா, அல்லது
ராணுவத்தின் மூலம் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கிய பட்டேலை ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என்று அழைப்பது நியாயமா என்று கேட்டு எழுதலாமா,
என்றெல்லாம் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருந்தவேளை ஒரு மீம்ஸ் இத்தனையையும் ஒரு படம் மூலம் கூறிவிட்டது.
மொட்டை ராஜேந்திரன் முகத்தில் பட்டேல் சிலையை வெளிப்படுத்தியதன் மூலம் மோடியின் மூவாயிரம் கோடி ரூபா திட்டத்தை தூக்கியெறிந்துவிட்டார்கள்.
இந்த படத்தை பார்த்தவுடன் ஏற்பட்ட சிரிப்பு இன்னும் அடங்கவில்லை. பாராட்டுகள்.
இப்போது புரிகிறதா அரசியல்வாதிகள் ஏன் மீம்ஸ் கிரியேட்டர்களை சிறையில் அடைக்க முனைகிறார்கள் என்று.

No comments:

Post a Comment