Tuesday, October 30, 2018

இதில் மாலை சூடுவதற்கு யார் தகுதியானவர்கள்

•இதில் மாலை சூடுவதற்கு யார் தகுதியானவர்கள்
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
இதோ மாலையும் கழுத்துமாக நிற்கும் புதுமண தம்பதிகளைப் பாருங்கள்.
திருமண மேடையிலேயே இவர்கள் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?
27 வருடமாக சிiயில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பியுள்ளார்கள்.
இதோ இன்னும் இரண்டுபேர் மாலையும் கழுத்துமாக உட்கார்ந்து இருப்பதை பாருங்கள்.
இவர்கள் ஈழத்து தமிழ் தலைவர்களான சம்பந்தர் அய்யாவும் மாவை சேனாதிராசாவும்.
ஏழு தமிழரில் நாலு பேர் ஈழத்து தமிழர். ஆனாலும் இந்த தலைவர்கள் இதுவரை ஒருமுறைகூட அவர்களை விடுதலை செய்யும்படி கோரவில்லை.
ஆனாலும் இவர்களை “வாழும் வீணர்” என்றும் “ஈழத்து சேகுவரா” என்றும் பட்டம் சூட்டி அழைக்கின்றார்கள்.
அதேவேளை தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வாளர்களை “சமூகவிரோதிகள்” என்று எச்ச ராசாவும் ரஜனியும் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் இனத்திற்கு இப்படி ஒரு நிலையா?

No comments:

Post a Comment