Tuesday, October 30, 2018

இன்னொரு இனத்தை அடக்கும் எந்தவொரு இனமும் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது!

•இன்னொரு இனத்தை அடக்கும் எந்தவொரு இனமும்
ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது!
யாரோ இரண்டு சிங்கள காடையர்களுக்கு சிங்களத்தில் பதில் அளிக்காமல் வந்தமைக்கு மாணவர்களை சிலர் கிண்டல் செய்கின்றனர்.
அநுராதபுரம் செல்வோர் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்று வேற உபதேசம் செய்ய முற்படுகின்றனர்.
அநுராதபுரம் செல்லும் தமிழர் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவோர், யாழ்ப்பாணம் வரும் சிங்களவர் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினால் ஏற்றுக் கொள்வார்களா?
மாணவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறே கோரி பாதயாத்திரை சென்றார்கள்.
ஆனால் அவர்களை ஏதோ புலிகளுக்காக வந்தவர்களாக இரண்டு காடையர்கள் சித்தரிக்க முயன்றதை இதுவரை எந்தவொரு சிங்கள முற்போக்குவாதிகளும் கண்டனம் செய்யவில்லை.
ஆனால் அவர்களுக்கு ஒரு விடயத்தை உரத்து கூறவிரும்புகிறோம் “ மாணவர்கள் மலையில் ஒரு கல்லை உடைப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் அவர்கள் மலையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விரைவில் உணருவீர்கள்”.
தமிழ் இனத்தின் சுதந்திரத்தை சிங்கள இனம் மறுக்குமேயானால் சிங்கள இனம் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
இதை அனைவரும் உணரவேண்டும்!

No comments:

Post a Comment