Thursday, February 28, 2019

13வது நாளாக முருகன் நளினி உண்ணாவிரதம் தொடர்கிறது

13வது நாளாக முருகன் நளினி உண்ணாவிரதம் தொடர்கிறது
தாங்கள் இறந்தால் தங்கள் உடலை சென்னை மருத்துவமனைக்கு வழங்கும்படி அவர்கள் கேட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்யாதது மட்டுமன்றி அவர்களது இறுதி விருப்பத்தையும் நிறைவேற்ற தமிழகஆளுநரும் அரசும் தயாரில்லை என தெரிகிறது.
அவர்கள் இறந்தால் அவர்களது உடலை இரகசியமாக புதைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் நளினி உயிருக்கு ஏதும் நிகழுமாயின் அதற்கு தமிழக ஆளுநரும் அரசுமே பொறுப்பு.
சிறையில் இருந்து இறந்த கிருத்தவ பாதிரியாரின் காதல் நினைவாக இன்று நாம் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனால் சிறையில் ஒரு காதல் ஜோடி மரணத்தின் வாசலில் நிற்கிறது என்பதை கவனிக்காமல் இருக்கின்றோம்.
ஆம். நளினி ஈழத் தமிழரான முருகனை காதலித்தமைக்காக 28 வருடங்கள் சிறையில் இருக்கிறார்.
இனியாவது இவர்கள் விடுதலை பெற நாம் குரல் கொடுக்க வேண்டாமா?

No comments:

Post a Comment