Thursday, February 28, 2019

செய்தி - மறப்போம் மன்னிப்போம் - பிரதமர் ரணில்

செய்தி - மறப்போம் மன்னிப்போம் - பிரதமர் ரணில்
பிரதமர் அவர்களே !
எதை மறப்பது?
எதை மன்னிப்பது?
காலில் மிதிபடும் புழு கூட
மறப்போம் மன்னிப்போம் என்று
அப்படியே அடங்கி கிடப்பது இல்லையே?
மாறாக திமிறி துடித்து எழுகிறதே
தமிழன் மட்டும் எல்லாவற்றையும்
மறந்து மன்னித்துவிட வேண்டும் என்று
எப்படி எதிர் பார்க்கிறீர்கள் பிரதமரே?
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது
இன்னும் சிறையில் உள்ளவர் விடுதலை செய்யப்பட வில்லை
காணாமல் போனவர் கண்டு பிடிகக்கப்பட வில்லை
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேறவில்லை
நீங்களோ 71வது சுதந்திர தினம் கொண்டாடுகிறீர்கள்
ஆனால் கேப்பாப்புலவில் தமிழ் சிறுவன் வீதியில் கிடக்கிறான்
நீங்கள் சுமந்திரனையும் சிறீதரனையும் விலைக்கு வாங்கலாம்
ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது
ஒரு பக்கம் இலங்கை அரசு உதைக்கிறது
மறுபக்கம் இந்திய அரசு மிதிக்கிறது
உங்கள் துட்ட கைமுனு எப்படி உறங்கவில்லையோ
அதுபோலவே நாமும் இருக்கிறோம்.
நாங்களும் விடுதலை பெறுவோம். இது உறுதி.

No comments:

Post a Comment