Thursday, February 28, 2019

•பன்றிகள் ஏன் சாக்கடையை புனிதம் என்கின்றன?

•பன்றிகள் ஏன் சாக்கடையை புனிதம் என்கின்றன?
பாராளுமன்றம் பன்றிகள் உழலும் சாக்கடை என்றார் தோழர் லெனின். அதனால்தான் எமது நாட்டிலும் இப் பன்றிகள் தேர்தல் பாதையை புனிதமானது என்று கூறிவருகின்றனர்.
இந்த தேர்தல் பாதையால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனாலும் பன்றிகள் அதனை உயர்த்திப்பிடிப்பதற்கு காரணம் அதன் மூலம் அவைகள் பல சலுகைகளை அனுபவிக்கின்றன.
இதோ ஒரு சின்ன உதாரணம். வடமாகாணசபை அவைத் தலைவர் என்ற பன்றியின் சில சலுகைகளை படித்து பாருங்கள்.
•மாத சம்பளம் - 63500 ரூபா
•உபசரணை – 2000 ரூபா
•எரிபொருள் படி – 1000லீட்டர் * 100 = 100000 ரூபா
•வாடகைப்படி – 25000 ரூபா
•காகிதப்படி – 1250 ரூபா
•அமர்வு ஒன்றுக்கான படி – 1250 ரூபா
•அமர்வு ஒன்றுக்கான பிரயாணபடி – 3000 ரூபா
•தொலைபேசிப்படி (உறுப்பினர்களுக்கு) – 25000 ரூபா
•வாகனப்படி – 40000 ரூபா
ஆக மாத மொத்த சம்பளம் - 261000 ரூபா
அவர் ஒரு வருடம் பெறும் மொத்த சம்பளம் - 3132000 ரூபா
இது தவிர அவர் தன்; உறவினர்களை தன் உதவியாளராக(8 பேர்) பதிவு செய்தும் சம்பளம் பெற்று வருகிறார். அதன்படி,
பிரத்தியேக செயலர் (1) – கொடுப்பனவு – 23000 +6600 ரூபா
இணைப்பு செயலர் (1) – கொடுப்பனவு – 22500 +6600 ரூபா
தனிப்பட்ட உதவியாளர் (1) – கொடுப்பனவு – 13990 +6600 ரூபா
முகாமைத்துவ உதவியாளர் (2) – கொடுப்பனவு – 13900+ 6600 ரூபா
அலுவலக பணியாளர் (2) – கொடுப்பனவு – 11730 +6600 ரூபா
சாரதி (1) - கொடுப்பனவு – 12470 +6600 ரூபா
எட்டு உதவியாளர்களின் ஒரு மாத மொத்த சம்பளம் - 176020 ரூபா
இந்தளவு சம்பளமும் சலுகைகளையும் 5 வருடமாக அனுபவித்து வரும் அவைத் தலைவர் இதுவரை சாதித்தது என்ன?
முதலாவது சாதனை – தனக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு சொகுசு கதிரைகள் வாங்கியது.
இரண்டாவது சாதனை – முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்தமை.
இப்போது புரிகிறதா இவர்கள் ஏன் தேர்தல் பாதையை வலியுறுத்துகிறார்கள் என்று?

No comments:

Post a Comment