Thursday, February 28, 2019

முல்லைத்தீவில் பிறந்திருந்தால் புலியாக போராடி சிறை சென்றிருப்பேன் - பொதுபல சேனா ஞானதேரர்.

செய்தி- முல்லைத்தீவில் பிறந்திருந்தால் புலியாக போராடி சிறை சென்றிருப்பேன் - பொதுபல சேனா ஞானதேரர்.
ஞான தேரர் அவர்களே!
முதலாவது, நீங்கள் உங்கள் இனத்திற்காக போராடி சிறைக்கு செல்லவில்லை
இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பிற்காகவே உங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
மூன்றாவது உங்கள் இனத்தைச் சேர்ந்த அதுவும் ஒரு பெண்ணை மிரட்டியதற்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
எனவே உங்கள் சிறை வாழ்க்கையை தியாகமாக காட்ட புலிகளை துணைக்கு அழைக்க வேண்டாம்.
சிறை வாழ்வை முழுமையாக அனுபவியுங்கள். குறுக்கு வழியில் விடுதலை பெற முயலாதீர்கள்.
இனியாவது செய்த தவறை உணருங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருங்கள்.

No comments:

Post a Comment