Thursday, February 28, 2019

ஐ.நா இரங்குமா? இந்த மக்களுக்கு பதில் கிடைக்குமா?

•ஐ.நா இரங்குமா?
இந்த மக்களுக்கு பதில் கிடைக்குமா?
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் கடந்த 700 நாட்களாக நடைபெற்று வருகிறது.
தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர்கள் இதுவரை இந்த மக்களுக்கு பதில் அளிக்கவில்லை.
இதனால் தமக்கு நியாயம் கிடைக்க ஐ.நா வழி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்
ஐ.நா எமக்கு உதவ வந்தாலும் அதை தடுப்பவர்களாக எமது தலைவர்கள் இருக்கிறார்கள்.
“நடந்தது இனப்படுகொலை அல்ல. போர்க்குற்றம் மட்டுமே, சர்வதேச விசாரணை தேவையில்லை உள்ளக விசாரணையே போதும்” என்று தலைவர்களான சுமந்திரனும் சம்பந்தரும் சொல்லி வருகிறார்கள்.
இலங்கை அரசு கேட்காமலே அதற்கு இரண்டு வருட அவகாசம் பெற்றுக்கொடுப்பவராக சுமந்திரன் இருக்கிறார்
இப்படி எமது தலைவர்களே எமக்கு எதிராக செயற்படும்போது ஐ.நா எப்படி எமக்கு உதவும்?

No comments:

Post a Comment