Thursday, February 28, 2019

•ஜ.நா வுக்கும் பெப்பே சம்பந்தர் அய்யாவுக்கும் பெப்பே மொத்த தமிழினத்திற்கும் பெப்பெப்பே

•ஜ.நா வுக்கும் பெப்பே
சம்பந்தர் அய்யாவுக்கும் பெப்பே
மொத்த தமிழினத்திற்கும் பெப்பெப்பே
முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள்
பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றார்கள்.
அதன் பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராக கலந்துகொள்ளலாம். ஆனால் தீர்ப்பு வழங்க முடியாது என்றார்கள்
இப்பொது இராணுவத்தின் மீது எந்த விசாரணையும் நடத்த முடியாது என்றும் புலிகளே தமிழ் மக்களை கொன்றார்கள் என்று கூறியுள்ளார்கள்.
பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கதையாகிவிட்டது தமிழ் மக்களுக்கு
40 அயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எப்படி சர்வசாதரண விடயமாக ஆக்கிவிட்டார்கள்?
இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்கள் ஆரம்பம் முதலே எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் அவர்களை நம்பும்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
"சின்ன கதிர்காமர்" சுமந்திரன் அவர்கள் நாடுநாடாக சென்று பிரச்சாரம் செய்தார்
முதலில் ,நடந்தது இனப்படுகொலைதான் ஆனால் அதற்கு ஆதாரம் இல்லாத படியால் அதை போர்க்குற்றம் என்றே கூறவேண்டும் என்றார்.
அடுத்து சர்வதேச விசாரணை தேவையில்லை. சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை போதும் என்றார்.
இலங்கை அரசு கோராமலே அதற்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்தார்.
இனி இந்தமுறை என்ன செய்து இலங்கை அரசைக் காப்பாற்றப் போகிறாரோ தெரியவில்லை
இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் எல்லாம் சேர்ந்தே தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு எமது தலைவர்களான சம்பந்தர் அய்யா, சுமந்திரன் ஆகியோர் துணை போகின்றனர்.
இலங்கை அரசு இன அழிப்பு செய்வதற்கு இந்தியா அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் எல்லாம் உதவி புரிந்து வந்துள்ளன.
இன்றும்கூட இந்திய அரசே இலங்கையைக் காப்பாற்றி வருகிறது.
இறுதி நாட்களில் சில ராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்தியா போகுமுன்னர் கூறிய மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றபின் ராணுவத்தினர் எந்த போர்க்குற்றமும் செய்யவில்லை. புலிகள்தான் தமிழ் மக்களை கொன்றதாக பேட்டியளித்தார்.
ஒருவேளை மகிந்த ராஜபக்சவே தனது தமிழ் இனப் படுகொலைகளை ஒப்புக்கொள்ள முன்வந்தாலும் இந்திய அரசு அதை அனுமதிக்காது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்து கொள்ளாமல் இவர்களிடமே எமக்குரிய நீதியை வழங்கும்படி கேட்கும் முட்டாள் தனத்தை என்னவென்று அழைப்பது?
இனியாவது இந்த அழிப்பு நாடுகளை நம்புவதை விடுத்து மக்களை நம்புங்கள்.
குறிப்பு- ராணுவத்தினர் எந்த போர்க்குற்றமும் செய்யவில்லை என்றால் மகிந்த ராஜபக்சவும் இலங்கை அரசும் ஏன் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள மறுக்கிறார்கள்?

No comments:

Post a Comment