Thursday, February 28, 2019

•“சின்னத்தம்பி”யை காப்போம்!

•“சின்னத்தம்பி”யை காப்போம்!
இன்று தமிழ்நாட்டில் இருந்து ஒரு நண்பர் மெஜென்சரில் என்னுடன் தொடர்பு கொண்டு “சின்னத்தம்பியை காப்போம். பிட்டிசனில் கையெழுத்திட்டு உதவுங்கள்” எனக் கேட்டார்.
நானும் கேப்பாப்புலவில் ரோட்டில் படுத்துக்கிடக்கும் சின்னத்தம்பியைத்தான் சொல்கிறார் என நினைத்து மிக்க மகிழ்ச்சியுடன் “ஓ தாராளமாக செய்வோம்” என்றேன்.
ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அவர் கோவையில் திரியும் சின்னத்தம்பி என்ற யானையைப் பற்றி பேசுகிறார் என்று.
அவர் தமிழ் சிறுவன் ஒருவன் 700 நாட்களாக தனது சொந்த நிலத்தை கேட்டு ரோட்டில் படுப்பது குறித்து கவலை இல்லை. ஆனால் ஒரு யானைக்கு இடம் வழங்கவில்லை என்று கவலைப்படுகிறார்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்திய பிரதமரே சாகும் தமிழர் குறித்து கவலை கொள்வதில்லை. மாறாக பசு மாட்டைப்பற்றித்தானே அதிகம் கவலைப்படுகிறார்.
பரவாயில்லை. அது அவர்கள் நாடு, அவர்கள் கவலை. நம் தலைவர்களே நம் சிறுவர்கள் பற்றி அக்கறை கொள்ளாதபோது இந்தியாவில் உள்ளவர்கள் அக்கறைப்படவில்லை என்று எப்படி நாம் வருத்தப்பட முடியும்?

No comments:

Post a Comment