Thursday, February 28, 2019

செய்தி – வேலூர் சிறையில் முருகன் நாலாவது நாளாக உண்ணாவிரதம்.

செய்தி – வேலூர் சிறையில் முருகன் நாலாவது நாளாக உண்ணாவிரதம்.
நீயும் இந்து நானும் இந்து என்டாங்களே
அப்படியென்றால் முருகனும் இந்து தானே
ஏன் முருகனுக்காக இந்த இந்துக்கள் இரங்கவில்லை?
தமிழக ஆளுநரும் இந்து பிரதமர் மோடியும் இந்து
இவர்கள் இந்துக்களுக்காக பாடுபடுவது உண்மை என்றால்
இந்து சாமியாராகவே மாறியிருக்கும் முருகனுக்கு ஏன் இரங்கவில்லை?
முருகன் மட்டுமல்ல அவரது மனைவி நளினி மற்றும் மகள் கூட இந்துதான்.
ஆனால் லண்டனில் இருக்கும் அவர் மகள் தாய் தந்தையரை பார்க்ககூட விசா வழங்க இந்த இந்து அரசு ஏன் மறுக்கிறது?
இந்தியாவில் சிறையில் பிறந்த முருகன் மகளுக்கு சட்டப்படி இந்திய குடியுரிமை கோர முடியும். ஆனால் இந்த இந்து அரசு மனிதாபிமானமாய்கூட விசா வழங்க மறுக்கிறதே?
முருகன் கோருவது கருணை அல்ல. சட்டப்படியான உரிமை. அவர் ஆளநரிடம் கோருவது தமிழக அரசின் மனுமீதான முடிவை தரும்படியே!
தமிழக அரசு அனுப்பிய மனுவின்படி சேலம் பஸ் எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்த அளுநர் அதே தமிழக அரசு அனுப்பிய இந்த ஏழு தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்.
இதில் இன்னும் வேடிக்கை என்னவெனில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா புத்த பிக்குவை விடுதலை செய்யும்படி குரல் கொடுத்துள்ள இலங்கை இந்து மகாசபையானது இந்த முருகனை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்கவில்லை.
இப்போது புரிகிறதா?
நீ இந்துவானாலும் தமிழன் என்றால் ஒரு மயிரும் கிடைக்காது.
முருகன் இனிமேலாவது இதனை புரிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment