Thursday, February 28, 2019

“தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு

“தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு உதவ வேண்டியது எமது கடமை. அதை நாம் இனியும் செய்வோம்” என்று அற்புதம்மாள் ஈழத் தமிழர்களுக்கு தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து இயங்கும் ஆதவன் வானொலிக்காக ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் அற்புதம்மாளை தொடர்பு கொண்டு புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு உதவியதற்காகவே பேரறிவாளன் 28 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.ஆனாலும் அத் தாய் மனம் மாறவில்லை. இனியும் ஈழத் தமிழருக்கு உதவி செய்வோம் என உறுதியாக கூறியுள்ளார்.
அதேபோல் எழு தமிழர்களில் ஒருவரான சாந்தனின் வயதான தாயாரும் தான் இறப்பதற்குள் மகனை பார்க்க விரும்புவதாக கூறியதையும் ஆதவன் வானொலி ஒலிபரப்பியுள்ளது.
இந்த 28 வருடத்தில் முதன்முதலாக ஒரு புலம்பெயர் வானொலி அற்புதம்மாளின் குரலை ஒலிபரப்பியது நிச்சயம் பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment