Thursday, February 28, 2019

அடேய் பாவம்டா எங்கட ஐயா. விட்டிடுங்கடா!

அடேய் பாவம்டா எங்கட ஐயா. விட்டிடுங்கடா!
ஆட்டுக்கு மாலைபோட்டு வேள்வியில வெட்டி பலியிடுவதுபோல எங்கட ஐயாவுக்கும் மாலை போட்டு அழைத்து சென்று பலி எடுத்திட்டீங்களேடா?
ஒருபுறத்தில் வேள்வியில ஆடுகளை பலியிடக்கூடாது என்று மிருகவதைச்சட்டத்தை இயற்றிவிட்டு மறுபுறத்தில் எங்கட ஐயாவை வெட்டிப்போட்டீங்களேடா?
பதவி போனவுடன் பங்களாவையும் தூக்கி எறிந்துவிடும் அளவுக்கு எங்கட ஐயா மானஸ்தன் இல்லைதான்டா. ஆனாலும் சாகிற நேரத்தில் சொகுசு பங்களாவுக்காக மகிந்த ராஜபக்சாவிடம் எங்கட ஐயாவைவ கெஞ்ச வைச்சது ரொம்பவும் ஓவரடா.
தன்ர பதவிக்காக உங்கட தேசியக்கொடியைக்கூட தூக்கி ஆட்டினாரேடா. அதைக்கூட மறந்து அவர் பதவியை பறிச்சிட்டீங்களேடா.
நீங்க உங்களுக்குள்ளேதான்டா மிளகாய்தூள் எறிஞ்சு விளையாடினீங்க. கடைசியில பார்த்தா எங்கட ஐயாவின்ர பதவியை பறிக்கத்தான் இந்த விளையாட்டை விளையாடினீங்களோ என்று யோசிக்க வைச்சிட்டுட்டீங்களேடா
எங்கட ஐயா பதவி இல்லாமல் கூட இருப்பாரடா. ஆனால் பங்களா இல்லாமல் இருக்கமாட்டாரடா. 1983ல் அகதியாக தமிழ்நாட்டுக்கு போனபோதுகூட எம்.ஜி.ஆரிடம் பங்களா கேட்டு வாங்கி வாழ்ந்தவரடா எங்கட ஐயா.
கடைசியில எங்கட சிங்கத்தை சாய்ச்சுப்புட்டீங்களேடா. பிளீஸ் அந்த சொகுசு பங்களாவையாவது ஐயாட்டை இ.ருந்து பறிக்காமல் விடுங்கடா.

No comments:

Post a Comment