Tuesday, February 28, 2017

•17வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்.

•17வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்.
தமது சொந்த நிலங்களை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 17வது நாளாக தொடருகிறது.
பெண்களும் குழந்தைகளும் உறுதியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வெற்றி பெறும்வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
நாளுக்குநாள் அந்த மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
இலங்கையில் அனைத்து இன மக்களின் ஆதரவை மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவையும் அது பெற்று வருகிறது.
இந்த மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தருகிறது.

No comments:

Post a Comment