Saturday, February 11, 2017

•தீ பரவுகிறது!

•தீ பரவுகிறது!
கேப்பாப்பிலவு மக்களின் அமைதிவழிப் போராட்டம் 9 வது நாளாக தொடர்கிறது.
அம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இணைந்துள்ளது.
தலைவர்கள் கைவிட்டாலும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.
அடக்குமுறை இருக்கும்வரை அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் இருக்கும்.
இந்த மக்கள் தமது நிலத்தை பெறும்வரை அதற்கான போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
ஒன்றிணைவோம்!
ஒருமித்து குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment