Tuesday, February 28, 2017

•லண்டனில் நடைபெற்ற தேர்தல் முறை மாற்றம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!

•லண்டனில் நடைபெற்ற தேர்தல் முறை மாற்றம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்று ( 18.02.17) மாலை 5 மணியளவில் இலங்கையில் வரவிருக்கும் தேர்தல் முறை மாற்றம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் காதர் மாஸ்டர் அவர்களின் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையில் இருந்து வந்திருந்த மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் திலகராஜ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி முகமட் பாயிஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.
வரவிருக்கும் தேர்தல் முறை மாற்றம் பற்றியும் அதனால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக விடயங்கள் குறித்தும் தமது கருத்துக்களை இவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் தமிழர் தகவல் மையம்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த , தேர்தல் முறைமைகள் சீரமைப்பு தொடர்பான துறையில் நிபுணரான கற்றீங்கா சில்வியா உடனான செயலமர்வுகளுக்காக லண்டன் வந்துள்ளனர்.
இறுதியாக பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் தந்தார்கள். பௌசர் நன்றி தெரிவித்ததுடன் கலந்துரையாடல் முடிவு பெற்றது.
குறிப்பு- பேச்சாளர்கள் இருவரும் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் உள்ள கருத்தகளை தெரிவித்தமை பாராட்டுக்குரியதாகும்.

No comments:

Post a Comment