Tuesday, February 28, 2017

•இந்திய அரசுதான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

•இந்திய அரசுதான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழ் மக்கள் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை.
இந்தியாவின் மனம் நோகும்படி நடந்திருந்தால் தமிழ் மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக ஈரோஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் எந்த தவறும் இழைக்கவில்லை. எனவே தமிழ் மக்கள் எந்த மன்னிப்பும் கேட்க வேண்டியதில்லை.
இந்திய அரசுதான் தமிழ் மக்களுக்கு தவறு இழைத்துள்ளது. எனவே இந்திய அரசுதான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இந்திரா காந்தியை சீக்கியரே கொன்றிருந்தார். இருந்தும் மோடி பிரதமர் ஆனதும் சீக்கிய இனத்தவருக்கு இழைத்த தவறுக்காக மன்னிப்பு கோரினார்.
அதேபோல் இந்திய ராணுவம் தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகளுக்காக இந்திய பிரதமர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஈரோஸ் நாய்க் குட்டிகளுக்கு இறைச்சி துண்டு வேண்டுமாயின் தாராளமாக வாலாட்டட்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை காட்டிக் கொடுக்க வேண்டாம்.
ஈரோஸ் இயக்கம் எப்போதும் இந்திய கைக்கூலி இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது. அது முன்னர் இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்கு இணங்க பலரை கொன்றுள்ளது.
ஈரோஸ் இயக்கம் முதலில் தனது கொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும். இநதியாவின் கைக்கூலி இயக்கமாக செயற்பட்டமைக்கு முதலில் மன்னிப்பு கேட்கட்டும்.
இந்திய உளவுப்படையின் கைக்கூலியாக செயற்படுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக பேசவோ மன்னிப்பு கேட்கவோ எந்த அருகதையும் கிடையாது.
உண்மையில் ஈரோஸ் இயக்கம் தமிழ் மக்கள் நலனில் அக்கறை உள்ளதாயின் முதலில் ஈரோஸ் இயக்கத்தை கலைக்கட்டும். அதுவோ தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்யும் பேருதவியாகும்.

No comments:

Post a Comment