Tuesday, February 28, 2017

•இந்த குழந்தை செய்த தவறு என்ன?

•இந்த குழந்தை செய்த தவறு என்ன?
இந்த குழந்தை சம்பந்தர் அய்யா குடும்பத்தில் பிறந்திருந்தால் இந் நேரம் இந்தியாவில் சொகுசு பங்களாவில் படுத்து உறங்கியிருக்கலாம்.
இந்த குழந்தை மாவை சேனாதிராசா குடும்பத்தில் பிறந்திருந்தால் இந் நேரம் இவர் வீடு விடுவிக்கப்பட்டு 2 கோடி ரூபா செலவில் திருத்தமும் செய்யப்பட்டிருக்கும்.
இந்த குழந்தை சரவணபவன் எம்.பி யின் குடும்பத்தில் பிறந்திருந்தால் இவரின் பிறந்தநாள் விழாவிற்கு ஜனாதிபதியே வந்து கேக் ஊட்டியிருப்பார்.
இந்த குழந்தை சுமந்திரன் குடும்பத்தில் பிறந்திருந்தால் கொழும்பில் ஆங்கில பள்ளியில் படித்து வசதியாக வாழ்ந்திருக்கலாம்.
இந்த குழந்தை சிறீதரன் எம்.பியின்; குடும்பத்தில் பிறந்திருந்தால் யாழ்ப்பாணத்தில் வீடு வாங்கி படிக்க வைக்கப்பட்டிருப்பார்.
இந்த குழந்தை தமிழ் இனத்தில் பிறந்தது மட்டுமன்றி கேப்பாப்பிலவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்துவிட்டார். இதுதான் இந்த குழந்தை செய்த தவறு.
அதனால்தான் தனது சொந்த நிலத்தில் உறங்க வேண்டியவர் ராணுவ கம்பிவேலியோரத்தில் படுத்து உறங்குகிறார்.
அதனால்தான் பாடசாலை சென்று படிக்க வேண்டியவர் தன் சொந்த நிலத்திற்காக 27 வது நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்.
அதனால்தான் ஒரு துண்டு பாணும் ஒரு கப் தேநீரும் அருந்திக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த பிறவியிலாவது இந்த குழந்தை யாராவது ஒரு தமிழ் தலைவரின் குடும்பத்தில் பிறக்கட்டும்.

No comments:

Post a Comment