Saturday, February 11, 2017

•தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்த தமிழ் எம்.பி மார்கள்!

•தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்து
பணம் சம்பாதித்த தமிழ் எம்.பி மார்கள்!
எம்.பி மார்களுக்கான வரி சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விற்று பணம் சம்பாதித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்பி மார்களின் விபரம் வெளியாகி உள்ளது.
கடந்தவாரம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி இவ் விபரங்களை வழக்கறிஞர் நாகானந்த கொடிதுவக்கு பெற்றுள்ளார்.
சிறீதரன் எம்.பி, மாவை சேனாதிராசா எம்.பி, சிவமோகன் எம்.பி, சிறீநேசன் எம்.பி ஆகியோர் தமது தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக சிறீலங்கா மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் பெரும்பாலும் லாண்ட் குரூசர் சொகுசு வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும் இவர்களுக்கு இதற்காக தலா நான்கு கோடி ரூபா வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றும் அறியவருகிறது.
அதாவது இவர்கள் தமது வாகனத்தை விற்றதன் மூலம் குறைந்த பட்சம் ஜந்து கோடி ரூபாவை ஒவ்வொருவரும் சம்பாதித்துள்ளதாகவும் தெரிகிறது.
இவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளும்
alary -54,485 Rs
fuel -30,000 Rs
transport-10,000 Rs
Entertainment- 10,000 Rs
mobile phone -2000 Rs
meeting each -500Rs
Current bill - free
Land line phone - free
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும்
Secretary
Vehicle
Quarters
Computers
Bodyguards
தலா ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வது போதாது என்று மேலதிகமாக வாகனத்தை விற்றும் ஜந்து கோடி ரூபா சம்பாதித்துள்ளனர்.
வாக்குபோட்ட மக்கள் தமது நிலம் கேட்டு ஒரு துண்டு பாணும் ஒரு கப் தேனீரும் அருந்திக் கொண்டு ராணுவ முகாம் வேலியோரம் படுத்தக்கொண்டு போராடுகின்றனர்.
ஆனால் பதவி பெற்ற இந்த எம்.பி மார்களோ கொஞ்சம்கூட அந்த மக்கள் மீது இரக்கம் கொள்ளாமல் கோடி கோடியாக சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொடுமையை சகித்துக்கொண்டு இருப்பது?

No comments:

Post a Comment