Tuesday, February 28, 2017

•கூலிக்கு மாரடிப்பவர்கள் ஏங்கே போய்விட்டார்கள்?

•கூலிக்கு மாரடிப்பவர்கள் ஏங்கே போய்விட்டார்கள்?
கேப்பாப்பிலவு போராட்டம் பற்றி அவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை?
புலிகள் ஆயுதப் போராட்டம் செய்தபடியால்தான் வெற்றி பெறவில்லை என்பவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் அகிம்சைப் போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது பற்றி கூறுவார்களா?
புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றதால்தான் இந்தியா உதவவில்லை என்பவர்கள் புலிகள் அற்ற இந்த 7 வருடத்தில் ஏன் இந்தியா தமிழ் மக்களுக்கு உதவவில்லை என்பது பற்றி கூறுவார்களா?
அகிம்சையை போதித்த காந்தியின் சிலையை முல்லைத்தீவில் வைக்கத் துடிக்கும் இந்தியா அதே முல்லைத்தீவில் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஏன் உதவவில்லை என்று கூறுவார்களா?
இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்தியா தமிழ் மக்களுக்கு உதவும் என்று இன்னமும் இவர்கள் கூறுவது ஏன்?
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய செயலர் ஜெய்சங்கர் வடக்கு கிழக்கு இணைப்பைகூட இந்தியா வலியுறுத்தாது என்று கூறியபின் இன்னமும் இந்தியாவை இவர்கள் நம்புவது ஏன்?
தமிழ் சிங்கள மக்களை பிரித்து வைத்து தனது நலனையே இந்தியா சாதித்கிறதேயொழிய தமிழ் மக்களின் நலனில் ஒருபோதும் அக்கறை கொள்ளவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது. அப்படியிருக்க தொடர்ந்தும் இவர்களின் இந்திய விசுவாசம் எதற்காக?

No comments:

Post a Comment