Tuesday, February 28, 2017

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று தோழர் லெனின் சொன்னது உண்மைதான் என்பதை மீண்டும் ஒரு தடவை தமிழக சட்டமன்றம் நிரூபித்துள்ளது.
தமிழக சட்டசபை பன்றிகளின் தொழுவம் என்பது மட்டுமல்ல சட்டசபை உறுப்pனர்கள் தாங்கள் பன்றிகள்தான் என்பதையும் நிரூபித்துள்ளனர்.
ஒரு பன்றி (ஸ்டாலின்) தானே தன் சட்டையைக் கிழித்துவிட்டு ஜனநாயகம் செத்துவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறது.
திமுக கட்சியால் 4 வருடம் பொறுமை காக்க முடியவில்லை. குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துவிட அது முயல்கிறது.
சசிகலா என்ற ஊழல் குற்றவாளிப் பன்றி தானே முதல்வர் பதவியை பிடிக்க முயன்றது. அது முடியாமல் போனதால் தனது சார்பாக இன்னொரு பன்றி மூலம் ஆட்சியை தக்கவைக்க முயல்கிறது.
பன்னீர்செல்வம் என்ற பன்றி பா.ஜ.க கட்சியின் துணையுடன் ஆட்சியை தொடர விரும்பியது. ஆனால் பெருன்பான்மையை திரட்ட முடியாததால் பதவியை இழந்துள்ளது.
இந்த பன்றிகள் யாருக்குமே மக்கள் மீது அக்கறை எதுவும் இல்லை. எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி ஊழல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமெ என்ற நோக்கில்தான் செயற்படுகின்றன.
ஆளும் அதிமுக கட்சியானது பன்றிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கோடி ருபா சசிகலா பன்றியால் வழங்கப்படுகிறது என்ற செய்தி உண்மைதான் என்பதை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
இதுவரை 13 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
பன்றிகளை மாற்றுவதாலோ அதாவது கட்சிகளை மாற்றுவதால் சட்டசபை புனிதமாகிவிடாது. அங்கு ஜனநாயகம் மலர்ந்துவிடாது. மக்களின் எந்த குறையும் தீர்ந்துவிடாது.
இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும்.
அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்று தோழர் சண்முகதாசன் கூறியுள்ளார்.
எனவேதான் பாராளுமன்ற தேர்தல் பாதைமூலம் எந்த தீர்வையும் பெறமுடியாது என்று தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதை சரியென்பதை சட்சபை சம்பவங்கள் மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளன.
குறிப்பு- தாம் விரும்பும் பிரதிநிதியை வாக்களித்து தெரிவு செய்வதுபோல் அப் பிரதிநிதியின் செயற்பாடு விருப்பமில்லாதபோது திருப்பி அழைக்கும் அதிகாரத்தை இந்த பன்றிகள் மக்களுக்கு வழங்குமா?

No comments:

Post a Comment