Tuesday, February 28, 2017

•எல்லோருக்கும் வாழ்க்கையே போராட்டமென்றால் கேப்பாப்பிலவு குழந்தைகளுக்கு போராட்டமே வாழ்க்கை

•எல்லோருக்கும் வாழ்க்கையே போராட்டமென்றால்
கேப்பாப்பிலவு குழந்தைகளுக்கு போராட்டமே வாழ்க்கை
கேப்பாப்பிலவு குழந்தைகள் தமது சொந்த நிலத்தை திருப்பி தருமாறு கோரி கடந்த 20 நாட்களாக போராடி வருகிறார்கள்.
உலகில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் வாழ்க்கையே போராட்டமென்றால் கேப்பாப்pலவு குழந்தைகளுக்கு போராட்டமே வாழ்க்கையாக இருக்கிறது.
அவர்கள்,
உண்பது ஒரு துண்டு பாண்
குடிப்பது ஒரு கப் தேத்தண்ணி
உறங்குவது ராணுவ முள்கம்பி வேலியோரத்தில்
படிப்பது போராட்ட களத்தில்
பாடுவது ராணுவத்தை வெளியேறச்சொல்லி அவர்களே இயற்றிய பாடல்
அவர்களது கனவுகூட தமது சொந்த நிலம் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே.
ராணுவம்,
இரவில் மின்சாரத்தை நிறுத்தி மிரட்டியது
உள்சென்றால் சுடப்படுவீர் என பலகை வைத்து மிரட்டியது.
போட்டோ பிடித்து மிரட்டியது
நாய்களை ஏவி விட்டு மிரட்டியது
எத்தனையோ தடைகள் வந்தபோதும் குழந்தைகள் அத்தனை தடைகளையும் எதிர்த்து நின்று போராடுகின்றனர்.
தமது நிலம் தமது கையில் கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்த கேப்பாப்பிலவு குழந்தைகளின் போராட்டம் கேட்பாரற்று போய்விடாது.
இவர்களின் நியாயமான போராட்டம் அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
அது வெற்றி பெறுவது உறுதி. வரலாற்றில் இடம் பிடிக்கப்போவதும் உறுதி.

No comments:

Post a Comment