Tuesday, February 28, 2017

•இந்தோனேசியாவில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்!

•இந்தோனேசியாவில் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்!
இந்தோனேசியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பும் அபாயம் தோன்றியுள்ளது.
அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் கைது செய்து சிறையில் அடைக்கப்படலாம் அல்லது காணாமல் ஆக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
எனவே அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் அல்லது அகதி அந்தஸ்து வழங்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
தமது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர்.
2009 ஆண்டு யுத்தத்த்pல் சிக்கி வேதனையை அனுபவித்தவர்கள். இன்றுவரை அகதி அந்தஸ்து இல்லாமையால் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு மனிதவுரிமை அமைப்புகள் இந்தோனேசிய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தமது உறவுகளின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment