Thursday, June 29, 2017

•லண்டனிலும் காரித் துப்பி விட்டார்கள் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

•லண்டனிலும் காரித் துப்பி விட்டார்கள்
தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழக அரசு உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலை செயய்யப்போகிறதா? அல்லது உலகளவில் இன்னும் அசிங்கப்படப் போகிறதா?
இதுதான் இன்று தமிழக அரசுமுன் உலகில் வாழும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள கேள்வியாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக திருமுருகன் காந்தியையும் மற்றும் 3 பேரையும் தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளது.
இந்த அராஜகத்தை கண்டித்து தமிழகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சொலிடாறிற்றி அமைப்பினர் நேற்றைய தினம் தமது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளனர்.
அதுவும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் சென்று நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
லண்டனில் பல தமிழ் அமைப்புகள் இருந்தாலும் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பினர் லண்டன் இந்திய தாதரகத்தின் முகத்தில் ஓங்கி குதத்pயுள்ளனர்.
லண்டன் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பினரின் இச் செயற்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது. மற்றைய அமைப்புகளுக்கு வழி காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment