Thursday, June 29, 2017

•வள்ளுவர் சிலை திறப்பு இது தமிழ் மக்கள் மீதூன இந்திய அக்கறையா? அல்லது, தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பா?

•வள்ளுவர் சிலை திறப்பு
இது தமிழ் மக்கள் மீதூன இந்திய அக்கறையா?
அல்லது, தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பா?
முல்லைத்தீவில் காந்தி சிலை அமைத்து மூக்குடைபட்ட இந்திய தூதர் இப்போது வள்ளுவர் சிலை வைத்துள்ளார்.
என்னவோ தெரியவில்லை. எதாவது ஒரு சிலையை வைத்தே தீருவேன் என்று இந்த இந்திய தூதர் அடம்பிடித்துக்கொண்டே இருக்கிறார்.
நேற்றைய தினம் (19.06.17) வவுனியா புளியங்குள இந்துக் கல்லூரியில் மிகப் பெரிய வள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் சிலை வழங்கியவர்- இந்திய பெரு முதலாளி வி.ஜி.சந்தோசம்
வள்ளுவர் சிலையை திறந்து வைத்தவர்- இந்திய தூதர் நடராஜன்
விருந்தினராக கலந்துகொண்டவர்- கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணன்
இவையனைத்தும் ஒருங்கிணைத்தவர்- மறவன்புலவு சச்சிதானந்தன் (ஈழத்து சிவசேனை)
இவர்கள் அத்தனைபேரும் ஈழத்து தமிழ்மக்கள் மீதான அக்கறையின் பேரிலேயே பெரும் செலவில் வள்ளுவர் சிலையை அமைத்தார்கள் என நம்புவர்களிடம் ஒரேயொரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்.
இதே வன்னியில் கூரைகூட மேயாமல் பாடசாலை இருக்கும்போது பெரும் செலவில் வள்ளுவர் சிலை ஏன் அமைக்க வேண்டும்?
படித்த பட்டதாரிகள் வேலை கேட்டு போராடுகிறார்கள். ஆனால் இந்த கல்வி அமைச்சர் இந்தியாவில் இருந்து 1000 ஆசிரியர்களை இறக்குமதி செய்ய இருக்கிறார்.
எனவே இந்த கல்வி அமைச்சர் வன்னி மக்களின் நலனுக்காகவே வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் என்று எப்படி நம்புவது?
இதே வன்னியில் காணாமல் போனவர்களின் உறவுகள் 100 நாட்களை தாண்டி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு உதவ அக்கறையற்ற இந்திய தூதர் தமிழ் மக்கள் மீது அக்கறையில் வள்ளுவர் சிலை அமைக்கிறார் என்று எப்படி நம்புவது?

No comments:

Post a Comment