Thursday, June 29, 2017

அவைத்தலைவர் சிவஞானம் பதவி விலக வேண்டும். இல்லையேல் பதவி விலக்கப்பட வேண்டும்.

•அவைத்தலைவர் சிவஞானம்
பதவி விலக வேண்டும். இல்லையேல்
பதவி விலக்கப்பட வேண்டும்.
ஊழல் மற்றும் மோசடிகள் புரிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தமைக்காக முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வரலாற்றில் மிகப் பெரும் கறையை தமிழ் மக்கள் மீது பூசிவிட்டார் அவைத் தலைவர் சிவஞானம்.
தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவைத் தலைவர் என்ற பதவிக்குரிய மரபையும் மீறி செயற்பட்டுள்ளார் இந்த அவைத் தலைவர் சிவஞானம்.
மக்களுக்காக எதையும் செய்யாத இந்த அவைத் தலைவர் சிவஞானம் தனக்கு அமருவதற்கு சொகுசாக இல்லை என்று கூறி இதவரை மூன்று ஆசனங்களை மாற்றியுள்ளார்.
இறுதியாக இவர் தனக்கு அமருவதற்காக வாங்கியுள்ள ஆசனத்தின் பெறுமதி 90000 ரூபா. கொஞ்சம்கூட பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொள்கிறார்.
இனியும் இவர் அவைத் தலைவர் பதவியில் தொடர அனுமதிக்க கூடாது. எனவே அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்.
இவர்மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? அல்லது இவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு பதவியில் தொடரலாம் என்று கெஞ்சப் போகிறாரா?

No comments:

Post a Comment