Sunday, June 18, 2017

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே”

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே”
– பாவேந்தர் பாரதிதாசன்
திருமுருகன்காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தமைக்கு எதிராக உலகத் தமிழர்கள் ஒன்றுதிரள ஆரம்பித்துள்ளார்கள்.
படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழருக்கு அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக திருமுருகன்காந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராக தமிழகத்தில் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மனிதவுரிமை அமைப்புகள் சினிமா கலைஞர்கள் இலக்கியவாதிகள் என பலதரப்பட்டவர்களும் எதிர்ப்பு குரலை பதிவு செய்கிறார்கள்.
ஆனால் இந்த அடக்கு முறைக்கு எதிராக இதுவரை ஒரு ஈழத் தமிழ்தலைவர் குரல் கொடுக்கவில்லை.
இந்திய அரசுக்கு பயந்து ஈழத் தமிழ் தலைவர்கள் மௌனமாக இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் அப்படி நன்றி கெட்டத்தனமாக இருந்து விடமாட்டார்கள்.
சுவிற்சலாந்தில் உள்ள ஈழத் தமிழர்கள் நாளை வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 08.06.17 யன்று நடைபெறவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்தள்ளது.
உலகில் உள்ள தமிழ் மகக்ள் அனைவரும் ஒன்று திரண்டால் நிச்சயம் எம் பகைவர் ஓடி மறைவர். இது உறுதி.

No comments:

Post a Comment